| ரஷ்ய ஜனாதிபதியை ஜனாதிபதி மஹிந்த சந்தித்து கலந்துரையாடினார். |
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 08:26 PM] [ ] |
ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றையதினம் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரீ மெட்வதேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். [மேலும்] |
| (4ம் இணைப்பு) |
| ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ காவல்துறையினரால் கைது |
[திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:45 PM] [ ] |
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33 PM] |
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்] |
| முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்! |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39 PM] |
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| புதிய பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் மீண்டும் திரும்பி வருவோம்: ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:00 PM] |
எதிர்வரும் புதிய ஏழாவது பாராளுமன்றத்திற்கு மக்கள் சக்தியுடன் தெரிவு செய்யப்படும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் திரும்பி வருவேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பொலிஸாரின் இடமாற்றங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:32 PM] |
இலங்கையில் கடந்த சனிக்கிழமை முதல் அமுலுக்கு வந்த சுமார் 202 பொலிஸாரின் இடமாற்றங்களில் உயர் அதிகாரிகளின் இடமாற்றங்கள் உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்த ரத்துக்கான உத்தரவை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விடுத்துள்ளார். [மேலும்] |
| சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08 PM] |
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்] |
| இடம்பெயர்ந்தோர் பொதுத்தேர்தலின் பின்னரே மீள்குடியமர்த்தப்படுவர் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:56 AM] |
இடம்பெயர் முகாம்களில் எஞ்சியுள்ள வன்னி மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் காலம் மேலும் நீடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் அவர்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலின் பின்னரே குடியமர்த்தப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37 AM] |
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்] |
| தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவேண்டும்: சித்தார்த்தன் (புளொட்) |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:35 AM] |
இலங்கையின் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| (2ம் இணைப்பு) |
| வித்தியாதரன் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு எதிராக புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் தெரிவித்துள்ள கருத்துகள் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:26 AM] |
 சுடரொளி பத்திரிகை ஆசிரியர் திரு வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் கடந்த வாரம் கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளமை மிகுந்த வேதனைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும், புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும் பல்வேறு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| சரத் பொன்சேகாவுடன் இருந்த ஊடகவியலாளர்கள் மீது விசாரணை |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:22 AM] |
சரத் பொன்சேகா தேர்தல் தினத்தின் மறுநாள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹோட்டலுக்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்த அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். [மேலும்] |
| ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:13 AM] |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில சக்திகள் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக புனிதி இளைஞர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரதனஜோதி தேரர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:10 AM] |
மக்கள் மத்தியில் செல்லும் பொலிஸார் ஆயுதங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் ஆயுதங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது: முன்னாள் பிரதம நீதியரசர் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:05 AM] |
 நீதவான்கள் சமநிலையைப் பேணுவது மிகவும் இன்றியமையாதது எனவும், மக்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் அவர்கள் அதிருப்தியுடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுவார்கள் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார். [மேலும்] |
| நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: லக்பிம |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:00 AM] |
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைப்பு காட்டி வருவதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| ஜனாதிபதித் தேர்தலில் அரசியலில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:52 AM] |
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஜி எஸ் பி வரிச்சலுகையை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும்: இலங்கை அரசாங்கம் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:38 AM] |
நீக்கப்பட்ட ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசல்ஸின் இலங்கை தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவை மேற்கோள் காட்டிய ஊடக அறிக்கை ஒன்றில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| இலங்கையுடனான கூட்டு கடல் பாதுகாப்பை இந்தியா விலக்கவில்லை: மு.க.ஸ்டாலின் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:30 AM] |
இலங்கையுடனான கடல் எல்லை பாதுகாப்பு தீவிரத்தன்மையை இந்திய மத்திய அரசாங்கம் முழுமையாக விலக்கிக் கொள்ளவில்லை என தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10 AM] |
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்] |
| தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்னவென்பதை அரசாங்கம் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: பா.உ. துரைரெட்ணசிங்கம் |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 02:31 AM] |
ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் ஏன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவில்லை என்பதை அரசாங்கம் மீளாய்வு செய்து அதற்கான பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட பா.உ. துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார். [மேலும்] |
| வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்களின் தொகையை குறைக்க பிரிட்டன் முடிவு |
| [திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 01:59 AM] |
வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாணவ விசாக்கள் பிட்டனில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால் அத்தகைய விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அலன் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரத்திற்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவிருக்கின்றன.
[மேலும்] |