|
|
|
| எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை: சரத் பொன்சேகா |
| [ திங்கட்கிழமை, 20 யூலை 2009, 03:12.00 AM GMT +05:30 ] |
எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபடும் திட்டமில்லை என புதிய கூட்டுப்படைக் கட்டளைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் அரசியலில் ஈடுபட்டால் லக்கி அல்கம மற்றும் ஜானக பெரேராவிற்கு நேர்ந்த நிலையே தமக்கும் நேரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
யுத்த வெற்றிகளை இலகுபடுத்த அரசியல் தலைமைத்துவம் முக்கியத்துவமானது அந்தத தலைமைத்துவத்தை ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சி சிறப்பாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத் தளபதி பதவியை துறந்தமை குறித்து தாம் கவலைப்படவில்லை எனவும், ஓர் பதவியை துறக்க நேரிடும் என தாம் அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல சிங்கள இணைய தளமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சேவை மூப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தால் ஒருபோதும் யுத்தத்தை வெற்றி கொண்டிருக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமையானர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், வெறும் அனுபவத்தினால் இராணுவ வெற்றிகளை ஈட்ட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஏற்கனவே நட்புறவு நாடுகளுக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
|
|
|
| நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது! தம் மீதான அவதூறு பற்றி ருத்ரா விளக்குகிறார்! |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:11.16 AM ] |
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம். [மேலும்] |
| யாழ். புலோலி வாசிக்கு மரண தண்டனை : தீர்ப்பு வழங்கப்பட்டதும் கைதி மாடியில் இருந்து குதித்துள்ளார் |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 05:15.51 PM ] |
யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இன்று கைதி ஒருவருக்கு மரண தண்டனையை விதித்தது. இதனை தண்டனை வழங்கப்பட்ட கைதி யாழ்ப்பாண நீதிமன்ற கட்டிடத்தொகுதியில் இருந்து கீழே குதித்துள்ளார். [மேலும்] |
| இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை: சவூதி அரேபியா |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:28.17 PM ] |
இலங்கைப் பணிப் பெண் மீது சித்திரவதை மேற்கொள்ளப்படவில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் மீட்பு |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 03:37.32 PM ] [ ] |
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய விமானத்தின் பாகங்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் வான் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] | | (2ம் இணைப்பு) |
| தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இந்தியா தவறிவிட்டது: நிருபமா முன் பேராசிரியர் சிற்றம்பலம் கவலை |
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 02:42.17 AM ] [ ] |
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். [மேலும்] |
|
|
| advertisement |
|
|