எனது கணவர் கைதாகவில்லை, கடத்தப்பட்டுள்ளார்! கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்: அனோமா பொன்சேகா
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 11:04.23 AM GMT +05:30 ]
எனது கணவர் கைது செய்யப்படவில்லை, கடத்தப்பட்டிருக்கிறார். ''முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது" என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.
"எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை" என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
அதேவேளை எனது கணவருக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒருதடவை உட்கொள்ள வேண்டிய மருந்துகளை வழங்குமாறு அவரது மனைவி அனோமா பொன்சேகா, அனுமதி கோரியுள்ள போதிலும் அந்தக் கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சு இதுவரை பதிலளிக்கவில்லை.
விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் உடம்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் காரணமாக வாழ்நாள் முழுவதும் இந்த மருந்தகளை உட்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
அத்துடன், 18 மணித்தியாலங்களுக்கு மேலாக மருந்து தொடர்ச்சியாக உட்கொள்ளாமல் விட்டால் அவருக்கு, பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என வைத்தியர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்ததாகவும் அனோமா பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்.
ஏபிசி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன்.
நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை.
எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும்.
எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை. யாரிடம் போய் உதவி கேட்பதும் என்றும் தெரியவில்லை. யாராவது எனது குமுறலைக் கேட்டு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
எனது கணவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளக் கூட அனுமதிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் அனோமா.
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 11:03.36 AM ]
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள அகம் புலம் தமிழர் வாழ்வியல் மகாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மகாநாட்டு அமைப்பாளரும், ஐரோப்பிய ஒன்றியத்தலைவருமான துரை கணேசலிங்கம், மகாநாட்டு செயலாளருமான ப.பரமேஷ்வரன் ஆகியோர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள சிறப்பறிக்கை. [மேலும்]
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:49.28 AM ]
18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் பயங்கரமான முயற்சி என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். [மேலும்]
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 06:15.13 AM ]
கனடாவிற்கு எம்.வி சன் சீ கப்பல் மூலம் சென்ற 492 இலங்கை தமிழ் அகதிகளுக்கும் அந்த நாட்டில் புகலிடம் அந்தஸ்து வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
[ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 01:36.33 AM ]
தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள் அண்மைக்காலமாக அழையாத விருந்தாளிகளால் அமர்க்களப்பட்டு வருகின்றது. பல அமைச்சர்கள், இராஜதந்திரிகள் தற்போதும் வடபகுதிக்குப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவின் பயணத்திற்கு இந்திய, இலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்திருந்தன. [மேலும்]
ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் கிழக்கு மாகாண மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத துன்பங்களையும் இழப்புக்களையும் கொடுத்த மாதங்கள். 1990ஆம் ஆண்டு யூன் மாதம் விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா படைகளுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களை ஸ்ரீலங்கா படைகள்..... [மேலும்]