பல்வேறு கட்சிகளையும் அமைப்புக்களையும் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மத்திய மற்றும் மாகாண அமைச்சர்கள் என சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பேசிய கனடியக் குடிவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்களே மேற்கண்டவாறு தெரிவித்ததோடு,
இவ்வாறு இளைய வயதில் புலம்பெயர்ந்த சமூகத்தினர் அரசியலில் ஈடுபடும் போது ஜனநாயக வழிமுறைகளில் பிரச்சினைகளிற்கான தீர்வுகளைக் காண்பதற்கான வாய்ப்புக்களைப் பெறுகிறார்கள் என்றும், அதுபோலவே கருத்து மோதல்களிற்கு கருத்துக்களாலேயே பதிலளிக்கும் பக்குவத்தன்மைப் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்ததோடு,
ஜனநாயக மரபுகளின் படி கருத்துப் பகிர்வில் ஈடுபடும் சுதந்திரம் கனடியர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டெனவும் அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்தில் சகலரையும் ஈடுபடுத்திச் செல்வதே சிறந்த ஜனநாயகம் என்றும் தெரிவித்ததோடு,
மற்றயைவரின் கருத்து ஒருவருக்கு பிடிக்காவிட்டால் அதற்கான பதில்கருத்தை அவர் வழங்குவதே ஆரோக்கியமான அரசியல் என்றும் அதை விடுத்து எதிர்க்கருத்துத் தெரிவிப்பவரை மிரட்டுதல் அல்லது மறைமுகமான பயமுறுத்தலிற்கு ஆட்படுத்துதல் என்பன ஆரோக்கியமான ஒரு சமுதாயக் கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.
மனித உரிமைகளை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இளைஞர்களை அரசியல் மயமாக்க ஒரு சிறந்த ஊடகமாக அமையும் எனவும் அவர்களை வழிநடத்தும் எனவும் தான் நம்புவதாகத் தெரிவித்தார்.
அவ்விழாவில் பேசிய வெளிநாட்டமைச்சர் பீற்றர் கென்ற் அவர்கள் மாநகர, மாகாண, மத்திய அரசியலில் இளையவர்கள் மற்றும் புதிய குடிவரவாளர்கள் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்ததோடு எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதையும் விளக்கினார்.
இவர்களோடு வேறு பல பிரமுகர்களும் இந் நிகழ்வில் உரையாற்றினர்.


|