Switch to
   
   
   
செய்தி
(2ம் இணைப்பு)
  • Photo
இலங்கையில் போர்க் குற்றம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைக்கழகம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது
[ சனிக்கிழமை, 23 மே 2009, 04:17.02 PM GMT +05:30 ]
25-05-2009 திங்கட்கிழமை  ஜ.நா மனித உரிமைக் கழகத்தால் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதா என விசாரணை நடத்தப்பட இருந்தது.

ரஷ்ய மற்றும் சீனாவின் தலையீட்டால் இது தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் 45 நாடுகளில் 17 நாடுகள் ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில், இது மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்படும் நிலை இருந்தது.

இதனையடுத்து விரைவாகச் செயல்பட்ட அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தமக்கு ஆதரவான 15 நாடுகளுடன் உடனடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தற்போது அந் நாடுகள் இணங்கிய காரணத்தால் செவ்வாய்க்கிழமை மீண்டும் சபையைக் கூட்டி ஆராயத் தீர்மானித்திருப்பதாக சற்று முன்னர் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு தனது அதி கூடிய தொழில்நுட்ப செய்மதி கொண்டு 16ம் திகதி முதல் 19ம் திகதிவரை நடந்த மிக முக்கிய உக்கிரமோதலை படம் பிடித்துள்ளது. இவை தற்போது ஆராயப்படுவதாகவும், அந்த அறிக்கையை செவ்வாய்க்கிழமைக்கு முன்னர் சமர்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் போர் குற்றம் குறித்து செவ்வாய்க்கிழமை காத்திரமான முடிவு எடுக்கப்படலாம் என நம்பப்படுகிறது. அனைத்துத் தமிழ் உறவுகளும் காத்திருங்கள். இது குறித்த மேலதிக செய்திகளை நாம் செவ்வாய்க்கிழமை பிரசுரிப்போம்.

[Photo: ]   REUTERS / AP   /    AFP


அத்துடன் இத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
ஆர்ஜென்ரீனா          Argentina,
பொஸ்னியா             Bosnia and Herzegovina,
கனடா                          Canada,
சிலி                               Chile,
பிரான்ஸ்                     France,
ஜேர்மனி                     Germany,
இத்தாலி                      Italy,
மெக்ஸிக்கோ           Mexico,
மொரிசியஸ்             Mauritius, 
நெதர்லாந்து               the Netherlands,
கொரிய குடியரசு    the Republic of Korea,
ஸ்லோவாக்யா        Slovakia,
ஸ்லோவேனியா     Slovenia,
சுவிற்சர்லாந்து         Switzerland,
உக்கிரைன்                 Ukraine,
ஐக்கிய  ராச்சியம்    United Kingdom.
உருகுவே                    Uruguay.


செய்திகள்: இந்தியா, தமிழகம், வணிகம், வீடியோ, கட்டுரைகள், நேர்காணல்

பிந்திய 15 செய்திகள்
Sponsor
Advertisements
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் : சரத் பொன்சேகா
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 04:33.42 PM ]
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா இன்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். [மேலும்]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், தொடரும் சிங்களத்தின் தமிழின அழிப்புப் போர்!
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:39.22 PM ]
முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெறாமல், சிங்கள தேசத்தின் தமிழின அழிப்புப் போர் தொடர்கின்றது. சிறிலங்காவின் அதிபர் தேர்தலுக்காகத் தமிழீழ மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த உயிர் வாழும் சலுகை தற்போது மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
சரணடைந்த புலிகளை அரச படையினர் சுட்டுக் கொல்லவில்லை என விளக்கமளிக்க சமரசிங்க ஜெனிவா பயணம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 12:08.13 PM ]
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லவில்லை என விளக்கமளிப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளார். [மேலும்]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் விடுவிக்கப்படுவர்: அரசாங்கம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 06:37.56 AM ]
தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து சிறுவர் போராளிகளும் எதிர்வரும் மே மாதத்துடன் விடுவிக்கப்படுவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிறுவர் பாதுகாப்ப அதிகார சபையின் தலைவர் ஜெகத் வெல்லவத்தை தெரிவித்துள்ளார். [மேலும்]
விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் இருவரை விசாரிக்க பொலிஸூக்கு நீதிமன்றம் அனுமதி
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2010, 03:10.19 AM ]
இலங்கை இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகியவற்றை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவந்த விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான 24 கோடி ரூபா பெறுமதியான.... [மேலும்]
புலம்பெயர் தமிழரை சூறையாட முனையும் சிங்களம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:04.31 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதன்முதலாக தமிழரின் பண்பாட்டுத் தலைநகரான யாழ்ப்பாணத்திற்குச் சென்ற வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, அங்கு அரசாங்கம் பல அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு புலம்பெயர் தமிழர் தங்களது.......... [மேலும்]
விளம்பரம்